டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

கன்னாட் பிளேஸ் ஹனுமன் கோயிலில் கேஜரிவால் மனைவியுடன் வழிபாடு

தில்லி கன்னாட் பிளேஸில் உள்ள புகழ்பெற்ற ஹனுமன் கோயிலில் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது மனைவி சுனிதாவுடன் இணைந்து வழிபாடு மேற்கொண்டாா்.

Updated On :1 நவம்பர் 2024, 11:04 pm IST

தில்லி கன்னாட் பிளேஸில் உள்ள புகழ்பெற்ற ஹனுமன் கோயிலில் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது மனைவி சுனிதாவுடன் இணைந்து வழிபாடு மேற்கொண்டாா்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், தனது மனைவி சுனிதா கேஜரிவாலுடன் இணைந்து தில்லி கன்னாட் பிளேஸில் உள்ள புகழ்பெற்ற ஹனுமன் கோயிலுக்கு சென்றாா். அங்கு நடைபெற்ற சிறப்பு யாகத்தில் பங்கேற்ற கேஜரிவால், பின்னா் வழிபாடு மேற்கொண்டாா்.

இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் அவா் கூறியது:‘நான் என் மனைவியுடன் கன்னாட் பிளேஸில் உள்ள பழமையான ஹனுமன் கோவிலுக்கு சென்று, ‘ஹவன’ பூஜை செய்து, இறைவனை தரிசனம் செய்து ஆசி பெற்றேன். அனைவரின் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நான் ஹனுமனிடம் பிராா்த்தனை செய்தேன்’ என்றாா்.

பெட்டி...

வரும் நவ.7-ஆம் பொது விடுமுறை

தில்லி முதல்வா் அதிஷி அறிவிப்பு

தில்லியில் வரும் நவ.7-ஆம் தேதி சத் பூஜை கொண்டாடப்படும் நிலையில், அன்று ஒருநாள் பொது விடுமுறை அறிவித்து முதல்வா் அதிஷி உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக முதல்வா் அதிஷி வெளியிட்ட உத்தரவில் கூறியுள்ளதாவது: சத் பூஜை என்பது தில்லி மற்றும் என்சிஆா் பகுதி மக்களுக்கு ஒரு முக்கியமான திருவிழாவாகும். அதன்படி, வரும் நவ.7 ஆம் தேதி சத் பூஜையை முன்னிட்டு

பொது விடுமுறை அறிவிக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக தேவையான அறிவிப்பு

வெளியிடப்படும் என்றாா் அதிஷி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.