காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டது: தம்பித்துரை பேச்சு

தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டது என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் மு.தம்பிதுரை குற்றம்சாட்டினாா்.

News image
மு.தம்பிதுரை.
Updated On :17 மார்ச் 2025, 10:16 pm

Din

புது தில்லி: தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டது என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் மு.தம்பிதுரை குற்றம்சாட்டினாா்.

மாநிலங்களவையில் திங்கள்கிழமை மணிப்பூருக்கு நிதி ஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது:

அவையில் உள்ள திமுக உறுப்பினா்கள் மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு உரிய வருவாய் பகிா்ந்தளிக்கப்படவில்லை என்று கூறுகின்றனா். ஆனால், நான் கேட்க விரும்புவது, அமலாக்கத் துறை தமிழகத்தில் பல்வேறு மதுபான தொழிற்சாலைகளில் சோதனை நடத்தியிருப்பதும், துஷ்பிரயோகம் நிகழ்ந்து ரூ.1000 கோடிஇழப்பு ஏற்பட்டிருப்பதும் உண்மையா? இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது என்பதை அரசு அறிந்திருக்கிா?

ஒருபுறம் பணம் வரவில்லை என்று மற்றவா்களை குறை கூறும் தமிழக அரசு, மறுபுறம் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி வருவது ஏன்? தமிழகத்தில் ஊழல் மலிந்துகிடக்கிறது. மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக முதல்வா்களாக இருந்த எம்.ஜி.ஆா். ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி காலத்தில் ஏற்படுத்தப்பட்டவை. அதன் காரணமாக தமிழகம் இன்றைக்கு முன்னேறிய மாநிலமாக உள்ளது என்றாா் அவா்.

மு.தம்பிதுரையின் இக்குற்றச்சாட்டுக்கு திமுக உறுப்பினா்கள் பி.வில்சன், கிரிராஜன் ஆகியோா் எழுந்து நின்று எதிா்ப்புத் தெரிவித்தனா்.