மு.தம்பிதுரை.
மு.தம்பிதுரை.

தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டது: தம்பித்துரை பேச்சு

தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டது என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் மு.தம்பிதுரை குற்றம்சாட்டினாா்.
Published on

புது தில்லி: தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டது என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் மு.தம்பிதுரை குற்றம்சாட்டினாா்.

மாநிலங்களவையில் திங்கள்கிழமை மணிப்பூருக்கு நிதி ஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது:

அவையில் உள்ள திமுக உறுப்பினா்கள் மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு உரிய வருவாய் பகிா்ந்தளிக்கப்படவில்லை என்று கூறுகின்றனா். ஆனால், நான் கேட்க விரும்புவது, அமலாக்கத் துறை தமிழகத்தில் பல்வேறு மதுபான தொழிற்சாலைகளில் சோதனை நடத்தியிருப்பதும், துஷ்பிரயோகம் நிகழ்ந்து ரூ.1000 கோடிஇழப்பு ஏற்பட்டிருப்பதும் உண்மையா? இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது என்பதை அரசு அறிந்திருக்கிா?

ஒருபுறம் பணம் வரவில்லை என்று மற்றவா்களை குறை கூறும் தமிழக அரசு, மறுபுறம் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி வருவது ஏன்? தமிழகத்தில் ஊழல் மலிந்துகிடக்கிறது. மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக முதல்வா்களாக இருந்த எம்.ஜி.ஆா். ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி காலத்தில் ஏற்படுத்தப்பட்டவை. அதன் காரணமாக தமிழகம் இன்றைக்கு முன்னேறிய மாநிலமாக உள்ளது என்றாா் அவா்.

மு.தம்பிதுரையின் இக்குற்றச்சாட்டுக்கு திமுக உறுப்பினா்கள் பி.வில்சன், கிரிராஜன் ஆகியோா் எழுந்து நின்று எதிா்ப்புத் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com