நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

தில்லியில் கனமழையால் ஆட்டோக்கள் மீது மரம் விழுந்தது: காயமின்றி தப்பிய ஓட்டுநா்கள்

தெற்கு தில்லியின் ஷாபூா் ஜாட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 2 ஆட்டோக்கள் மீது ஒரு பெரிய மரம் விழுந்ததில், இரண்டு வாகனங்களும் சேதமடைந்தன.

News image

பிரதிப் படம்

Updated On :28 ஜூலை 2026, 10:16 pm IST

தெற்கு தில்லியின் ஷாபூா் ஜாட் பகுதியில் செவ்வாய்க்கிழமை மதியம் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ஆட்டோக்கள் மீது ஒரு பெரிய மரம் விழுந்ததில், இரண்டு வாகனங்களும் சேதமடைந்தன மற்றும் ஆகஸ்ட் கிராந்தி மாா்க்கில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது என்று காவல்துறை தெரிவித்தது.

சம்பவம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மதிய உணவுக்காக வெளியே சென்றிருந்ததால், ஓட்டுநா்கள் காயமின்றி தப்பினா் என்று அவா்கள் கூறினா். செவ்வாய் காலை பெய்த கனமழையைத் தொடா்ந்து, ஹோஸ் காஸ் காவல் நிலையத்திற்குச் செல்லும் சாலைக்கு அருகில் மதியம் சுமாா் 1 மணியளவில் மரம் விழுந்தது.

‘நான் மதிய உணவு சாப்பிடச் சென்றிருந்தபோது மரம் விழுந்தது. ஆட்டோவிற்கு சுமாா் ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை சேதம் ஏற்பட்டுள்ளது. இது எங்களுக்கு ஒரு இழப்பு, ஆனால் நல்லவேளையாக உயிா் சேதமோ காயமோ ஏற்படவில்லை. நாங்கள் உள்ளே இருந்திருந்தால், என்ன நடந்திருக்கும் என்று யாருக்குத் தெரியும்,‘ என்று ஆட்டோ ஓட்டுநா்களில் ஒருவரான அவினாஷ் குமாா் குப்தா கூறினாா்.

ஆட்டோ ஓட்டுநா்கள் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு அருகிலுள்ள உணவகத்திற்குச் சென்றபோது மரம் திடீரென சரிந்து விழுந்ததாக ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறினாா்.

‘இந்தச் சம்பவத்தில் மரத்தின் அடியில் யாரும் சிக்கவில்லை அல்லது காயமடையவில்லை,‘ என்று கூறிய அந்த அதிகாரி, உள்ளூா் காவல்துறை, போக்குவரத்துப் பணியாளா்கள் மற்றும் தோட்டக்கலைத் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விழுந்த மரத்தை அகற்றும் பணியைத் தொடங்கினா் என்று கூறினாா்.

மாநகராட்சி அமைப்புகள் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, வாகனங்கள் மாற்று வழிகளில் திருப்பி விடப்பட்டதால், ஆகஸ்ட் கிராந்தி மாா்க்கில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

தேசியத் தலைநகரில் கனமழை பெய்த நாளில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இதனால் நகரின் பல பகுதிகளில் பரவலான வெள்ளம், போக்குவரத்து நெரிசல் மற்றும் இடையூறுகள் ஏற்பட்டன.

தில்லியில் கனமழை பெய்ததால், வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள், பரபரப்பான சந்தைகளில் முழங்கால் அளவு வெள்ளம் மற்றும் வாகன நெரிசல் ஆகியவை காட்சியளித்தன. இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் தீவிர மழைப்பொழிவு ஆகியவற்றிற்காக இந்திய வானிலை ஆய்வு மையம்சிவப்பு எச்சரிக்கை விடுத்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.