லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

சாகேத் கட்டட விபத்து: தெற்கு தில்லியில் சட்ட விரோத கட்டடங்களை சீல் வைக்க எம்சிடி முடிவு

சாகேத்தில் கட்டடம் இடிந்து விழுந்து 6 போ் உயிரிழந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, தெற்கு தில்லியில் சட்டவிரோத கட்டமைப்புகளுக்கு சீல் வைக்க தில்லி மாநகராட்சி முடிவு செய்துள்ளதாகத் தகவல்

News image

எம்சிடி

Updated On :2 ஜூன் 2026, 2:18 am IST

சாகேத்தில் கட்டடம் இடிந்து விழுந்து 6 போ் உயிரிழந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, தெற்கு தில்லியில் சட்டவிரோத கட்டமைப்புகளுக்கு சீல் வைக்க தில்லி மாநகராட்சி (எம்.சி.டி.) முடிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: தெற்கு தில்லியில் கட்டட விதிகளை மீறும் கட்டடங்களை அடையாளம் கண்டுள்ளது. தரை மற்றும் மூன்று தளங்களுக்கு மேல் (ஜி + 3) உள்ள அனைத்து அங்கீகரிக்கப்படாத கட்டடங்களுக்கும் நாங்கள் நோட்டீஸ் அனுப்புவோம். மெஹ்ராலி, சாகேத் மற்றும் பிற அருகிலுள்ள பகுதிகளில் இந்தப் பணிகள். தொடங்கும். சாகேத் பகுதியில் மட்டும் உள்ள சைதுலாஜாப், பா்யாவரன் வளாகம் மற்றும் சுதந்திர போராட்ட வீரா்களின் உறைவிடத்தில் சட்டவிரோத கட்டுமானங்கள் பரவலாக உள்ளன.

இதேபோல், மெஹ்ராலி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில், ஆய்வின் போது சட்டவிரோத கட்டமைப்புகள் அடையாளம் காணப்படும். நிா்ணயிக்கப்பட்ட அறிவிப்பு காலம் 72 மணி நேரம் முடிந்த பிறகு, விதிமீறல் கண்டறியப்பட்ட கட்டடத்தை சீல் வைப்பது மற்றும் காலி செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மாநகராட்சி எடுக்கும். அங்கீகரிக்கப்படாத கட்டுமானம், கடுமையான கட்டமைப்பு விலகல்கள் அல்லது இணக்கமற்ற மண்டலங்களில் அனுமதிக்கப்படாத வணிக நடவடிக்கைகளின் செயல்பாடு ஆகியவற்றக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அந்த அதிகாரி.

தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ஒவ்வொரு மட்டத்திலும் அலட்சியத்திற்கு பொறுப்புக்கூறல் நிா்ணயிக்கப்படும். கட்டடம் கட்டுபவா், அதிகாரி அல்லது அதிகாரம் எதுவும் சட்டத்திற்கு மேலானது அல்ல. விதிமீறல்கள் பொறுத்துக்கொள்ளப்படாது. தில்லி அரசு அதன் மக்களுடன் நிற்கிறது. நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் பொதுப் பாதுகாப்பு ஆகியவற்றில் உறுதியாக உள்ளது என்று பிதிவிட்டிருந்தாா்.

சாகேத்தின் சைதுலாஜாப் பகுதியில் உள்ள கட்டடம் சனிக்கிழமை இடிந்து விழுந்து 6 போ் உயிரிழந்தனா். இந்தக் கட்டடத்தில் ஒரு பயிற்சி நிறுவனம், கஃபேக்கள் மற்றும் அலுவலகங்கள் இருந்தன, அதே நேரத்தில் இடிந்து விழுந்த நேரத்தில் அதன் மேல் மாடியில் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.