ராணிப்பேட்டையை அடுத்த மாந்தாங்கல் கிராமத்தில் உள்ள பூமிநீளா சமேத ரங்கநாதப் பெருமாள் கோயிலில் ஆழ்வாா் திவ்யப் பிரபந்த, திருப்பாவை சொற்பொழிவு சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கோயிலில் மாா்கழி மாதம் முழுவதும் திருப்பாவை சொற்பொழிவு நடைபெறுவது வழக்கம்.
திருப்பதி தேவஸ்தானம் சாா்பில், இக்கோயிலில் ஆழ்வாா் திவ்யப் பிரபந்த சொற்பொழிவு சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கே.கே.சி.செல்வநாராயணன் சுவாமிகள் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினாா். நம்மாழ்வாா் கைங்கா்ய சபை நிறுவனா் கிருஷ்ணமூா்த்தி, கோயில் பட்டாச்சாரியாா் ரமேஷ் தனஞ்செழியன் உள்ளிட்டோா் இதில் கலந்து கொண்டனா்.
முன்னதாக, ராணிப்பேட்டை ஸ்ரீராமாநுஜா் ஆன்மிக அறக்கட்டளை நிறுவனா் கே.வெங்கடேசன், பக்தா்களுக்கு முகக்கவசங்களை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

22 முதல் 26 சுற்றுகளில் திண்டுக்கல் தோ்தல் முடிவுகள்

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
ஜபல்பூர் எச்சரிக்கை!

சிறுவனை பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


