பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

உதவியாளர்களுடன் அஸ்வின் செய்த நகைச்சுவைகள்..! பிசிசிஐ பகிர்ந்த விடியோ!

இந்திய அணியின் உதவியாளர்களுடன் அஸ்வின் செய்த நகைச்சுவைகளை நினைவூட்டி விடியோ வெளியிட்டுள்ளது பிசிசிஐ.

News image

உதவியாளர்களுடன் அஸ்வின் செய்த நகைச்சுவைகள் - படங்கள்: எக்ஸ் / பிசிசிஐ

Updated On :19 டிசம்பர் 2024, 1:40 pm IST

இந்திய அணியின் உதவியாளர்களுடன் அஸ்வின் செய்த நகைச்சுவைகளை நினைவூட்டி பிசிசிஐ விடியோ வெளியிட்டுள்ளது.

இந்த விடியோவில் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி திலீப், பயிற்சியாளர் சோகம் தேசாய், பகுத்தாய்வாளர் ஹரி பிரசாத் மோகன், மருத்துவ உதவியாளர் அருண் கனடே இவர்களுடன் அஸ்வின் செய்த குறும்புத்தனத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

ஆடுகளத்திலும் சரி அதற்கு வெளியேவும் அனைவரிடமும் நன்றாக பழகுபவர் அஸ்வின்.

பிரிஸ்பேன் டெஸ்ட்டுக்குப் பிறகு ஓய்வை அறிவித்துள்ள அஸ்வினுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இந்திய அணியின் உதவியாளர்களுக்கு பந்துவீச்சி பயிற்சியளித்த விடியோவை பிசிசிஐ பகிர்ந்துள்ளது.

அதில், “ஆடுகளத்தில் கணக்கற்ற நினைவுகள் மட்டுமல்ல இதுபோன்ற பல கணங்களும் அஸ்வினின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் நினைவுகூரப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

38 வயதான அஸ்வின் டெஸ்ட்டில் 537 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இந்தியாவுக்காக இரண்டாவது அதிகபட்ச விக்கெட்டுகள் எடுத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓய்வு அறிவித்தது மனநிம்மதியாகவும் திருப்தியாகவும் இருப்பதாக சென்னை வந்தடைந்த அஸ்வின் பேட்டியளித்துள்ளார்.

2025 ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.