பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

உதவியாளர்களுடன் அஸ்வின் செய்த நகைச்சுவைகள்..! பிசிசிஐ பகிர்ந்த விடியோ!

இந்திய அணியின் உதவியாளர்களுடன் அஸ்வின் செய்த நகைச்சுவைகளை நினைவூட்டி விடியோ வெளியிட்டுள்ளது பிசிசிஐ.

உதவியாளர்களுடன் அஸ்வின் செய்த நகைச்சுவைகள் - படங்கள்: எக்ஸ் / பிசிசிஐ

Published On :

இந்திய அணியின் உதவியாளர்களுடன் அஸ்வின் செய்த நகைச்சுவைகளை நினைவூட்டி பிசிசிஐ விடியோ வெளியிட்டுள்ளது.

இந்த விடியோவில் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி திலீப், பயிற்சியாளர் சோகம் தேசாய், பகுத்தாய்வாளர் ஹரி பிரசாத் மோகன், மருத்துவ உதவியாளர் அருண் கனடே இவர்களுடன் அஸ்வின் செய்த குறும்புத்தனத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

ஆடுகளத்திலும் சரி அதற்கு வெளியேவும் அனைவரிடமும் நன்றாக பழகுபவர் அஸ்வின்.

பிரிஸ்பேன் டெஸ்ட்டுக்குப் பிறகு ஓய்வை அறிவித்துள்ள அஸ்வினுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இந்திய அணியின் உதவியாளர்களுக்கு பந்துவீச்சி பயிற்சியளித்த விடியோவை பிசிசிஐ பகிர்ந்துள்ளது.

அதில், “ஆடுகளத்தில் கணக்கற்ற நினைவுகள் மட்டுமல்ல இதுபோன்ற பல கணங்களும் அஸ்வினின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் நினைவுகூரப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

38 வயதான அஸ்வின் டெஸ்ட்டில் 537 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இந்தியாவுக்காக இரண்டாவது அதிகபட்ச விக்கெட்டுகள் எடுத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓய்வு அறிவித்தது மனநிம்மதியாகவும் திருப்தியாகவும் இருப்பதாக சென்னை வந்தடைந்த அஸ்வின் பேட்டியளித்துள்ளார்.

2025 ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.