பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

இதெல்லாம் நடக்குமெனத் தெரியாது..! அஸ்வின் பகிர்ந்த அழைப்புகள் விவரம்!

ஓய்வை அறிவித்த அஸ்வினுக்கு முன்னாள் பிரபலங்கள் செல்போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

அஸ்வின்

Published On :

ஓய்வை அறிவித்த அஸ்வின் தனக்கு யாரெல்லாம் செல்போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்கள் என்ற விவரத்தை பகிர்ந்துள்ளார். அதில் சச்சின், கபில் தேவ் பெயர்கள் இருக்கின்றன.

38 வயதாகும் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக பிரிஸ்பேன் டெஸ்ட்டின் 5ஆம் நாளில் தெரிவித்தார்.

இதுவரை டெஸ்ட்டில் மட்டும் 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பெர்த் டெஸ்ட்டில் தேர்வு செய்யாததால் ஓய்வு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

முன்னாள் இந்திய வீரர்கள் உள்பட பலரும் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் அழைப்பு விவரங்களைப் பதிவிட்டு அஸ்வின் கூறியதாவது:

25 வருடங்களுக்கு முன்பு என்னிடம் செல்போன் இருக்கும் என்றும் எனது கிரிக்கெட் வாழ்வின் கடைசிநாளில் இப்படியான அழைப்புகள் வருமென்றும் யாராவது கூறியிருந்தால் அன்று எனக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கும். சச்சின், கபில்தேவ்-க்கு நன்றி. ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.