மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

லண்டனுக்கு குடியேறும் விராட் கோலி..! ஓய்வை அறிவிக்கிறாரா?

விராட் கோலி விரைவில் லண்டனுக்கு குடியேறுவாரென அவரது சிறுவயது பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

News image

குடும்பத்தினருடன் விராட் கோலி. - படங்கள்: இன்ஸ்டா / விராட் கோலி

Updated On :20 டிசம்பர் 2024, 7:07 am

விராட் கோலி விரைவில் லண்டனுக்கு குடியேறுவாரென அவரது சிறுவயது பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர கிரிக்கெட் வீரருமான விராட் கோலி (36) டி20 உலகக் கோப்பையுடன் தனது டி20 கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தார்.

தற்போது, ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். பார்டர் - கவாஸ்கர் தொடரில் ஒரு சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இந்த நிலையில் தனது குடும்பத்தினருடன் விரைவில் லண்டனுக்கு குடியேறுவாரென அவரது சிறுவயது பயிற்சியாளர் தெரிவித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.

விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா கூறியதாவது:

தனது குடும்பத்தாருடன் விராட் கோலி லண்டனுக்கு குடியேற இருப்பது உண்மைதான். விரைவில் இந்தியாவை விட்டு வெளியேறுவார். கிரிக்கெட்டினை தவிர்த்து விராட் கோலி அதிகமாக தனது குடும்பத்தாருடன் நேரம் செலவிடுகிறார் என்றார்.

விராட் கோலிக்கு வாமிகா (பெண்), அகாய் (ஆண்) என இரண்டு குழந்தைகள் இருகிறார்கள்.

சமீபத்தில் லண்டனில் கோலி இடத்தை வாங்கியிருந்தார். அடிக்கடி லண்டனுக்கு சென்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி டெஸ்ட்டில் 9,166 ரன்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 13,906 ரன்களும் குவித்துள்ளார்.

சச்சினுக்குப் பிறகு அதிகளவில் கொண்டாடப்பட்டவர்களில் விராட் கோலியும் ஒருவராக இருக்கிறார். சமீபகாலமாக சரியாக விளையாடாமல் இருக்கும் கோலி பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறார்.

ஏற்கனவே, டி20யில் ஓய்வை அறிவித்த கோலி விரைவில் சர்வதேச போட்டிகளில் ஓய்வை அறிவிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி தோல்வியுற்றால் ஓய்வு பெறலாம் என பலரும் கூறிவரும் நிலையில் லண்டனுக்கு குடியேறுவாரென செய்தி கோலி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.