ராகுல் டிராவிட்டை ஒப்பிடுகையில் கௌதம் கம்பீர் தலைமையிலான பயிற்சியாளர்கள் அடங்கிய குழு வித்தியாசமனது என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
கௌதம் கம்பீர் தலைமையிலான பயிற்சியாளர்கள் அடங்கிய குழுவின் செயல்பாடுகள் வித்தியாசமான ஸ்டைலில் இருப்பினும், தங்களுக்குள் நல்ல புரிதல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (செப்டம்பர் 19) தொடங்கவுள்ள நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ரோஹித் சர்மா பேசியதாவது: ராகுல் டிராவிட், விக்ரம் ரத்தோர் மற்றும் பராஸ் மாம்ப்ரே அடங்கிய அடங்கிய பயிற்சியாளர்கள் குழுவின் ஸ்டைல் வித்தியாசமானது. தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கௌதம் கம்பீர் தலைமையிலான பயிற்சியாளர் குழுவின் ஸ்டைல் வித்தியாசமானது. ஆனால், அதனால் எந்த ஒரு பிரச்னையும் இல்லை. நல்ல புரிதல் என்பது முக்கியம். எனக்கும் கௌதம் கம்பீருக்கும் இடையே நல்ல புரிதல் இருக்கிறது என்றார்.
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் கௌதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு, இந்திய அணி விளையாடும் முதல் டெஸ்ட் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீதித்துறை உள்கட்டமைப்பு மேம்பாடு: உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் உயா் நிலைக் குழு அமைப்பு
டெல்டாவில் அரிய வகை மண்

முந்தையப் போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாடியிருந்தால்... ஹர்பஜன் சிங் கூறுவதென்ன?

ரோஹித் சர்மா எப்போது விளையாடுவார்? மும்பை கேப்டன் பதில்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



