தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

சாம்பியன்ஸ் டிராபி: தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் திடீர் விலகல்!

தென்னாப்பிரிக்க அணியில் இருந்து முன்னணி பந்துவீச்சாளர் ஜெரால்ட் கோட்ஜி திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார்.

News image

ஜெரால்ட் கோட்ஜி

Updated On :6 பிப்ரவரி 2025, 8:29 pm IST

சாம்பியன்ஸ் டிராபிக்கான தென்னாப்பிரிக்க அணியில் இருந்து முன்னணி பந்துவீச்சாளர் ஜெரால்ட் கோட்ஜி திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெறுகின்றன. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படுகிறது. அனைத்து அணிகளும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்த நிலையில், பிரிட்டோரியாவில் உள்ள சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மைதானத்தில் பந்துவீசும்போது இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டதால், பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து ஜெரால்ட் கோட்ஜி விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

காயத்தால் அவதிப்பட்டாலும் எஸ்ஏ-20 தொடரின் ஒரு போட்டியில் மட்டும் விளையாடினார். முன்னதாக, தென்னாப்பிரிக்காவின் பயிற்சியாளர் ராப் வால்டர், லாகூரில் நியூசிலாந்திற்கு எதிரான முத்தரப்பு தொடரின் முதல் போட்டிக்கான 12 பேர் கொண்ட அணியை அறிவித்தபோது ஜெரால்ட் கோட்ஜியும் அணியில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.