மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கடைசி ஒருநாள் போட்டிக்காக இங்கிலாந்து அணியில் புதிதாக வீரர் ஒருவர் சேர்ப்பு!

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டிக்காக இங்கிலாந்து அணியில் புதிதாக வீரர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

News image

டாம் பாண்டான் (கோப்புப் படம்)

படம் | ஐசிசி

Updated On :9 பிப்ரவரி 2025, 11:03 am

DIN

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டிக்காக இங்கிலாந்து அணியில் புதிதாக வீரர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக்கில் இன்று (பிப்ரவரி 9) நடைபெற்று வருகிறது.

இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், தொடர் இழப்பை தவிர்க்கும் முனைப்பில் இங்கிலாந்து அணியும் விளையாடி வருகின்றன.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டிக்காக டாம் பாண்டான், இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஜேக்கோப் பெத்தேலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், கடைசி ஒருநாள் போட்டியில் டாம் பாண்டான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 26 வயதாகும் டாம் பாண்டான் இங்கிலாந்து அணிக்காக 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 134 ரன்கள் எடுத்துள்ளார். அவரது அதிகபட்சம் 58 ரன்கள் ஆகும்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 12 ஆம் தேதி அகமதாபாதில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.