இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டிக்காக இங்கிலாந்து அணியில் புதிதாக வீரர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக்கில் இன்று (பிப்ரவரி 9) நடைபெற்று வருகிறது.
இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், தொடர் இழப்பை தவிர்க்கும் முனைப்பில் இங்கிலாந்து அணியும் விளையாடி வருகின்றன.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டிக்காக டாம் பாண்டான், இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஜேக்கோப் பெத்தேலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், கடைசி ஒருநாள் போட்டியில் டாம் பாண்டான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 26 வயதாகும் டாம் பாண்டான் இங்கிலாந்து அணிக்காக 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 134 ரன்கள் எடுத்துள்ளார். அவரது அதிகபட்சம் 58 ரன்கள் ஆகும்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 12 ஆம் தேதி அகமதாபாதில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய அணியில் இடம் பிடித்த 7 ஜிடி வீரர்கள்..! மும்பையிலிருந்து குஜராத்துக்கு மாறிய லாபி?

சிஎஸ்கே அணியில் காயமடைந்த ராமகிருஷ்ண கோஷுக்குப் பதிலாக மாற்று வீரர் அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்; முக்கிய ஆஸி. வீரர்கள் விளையாடுவதில் சிக்கல்!

ஷ்ரேயாஸ், சூர்யவன்ஷி, ரஜத் படிதாரை இந்திய டி20 அணியில் தேர்வு செய்க: மே.இ.தீவுகள் வீரர்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



