
இலங்கையின் சச்சின்... சோனல் தினுஷாவைப் புகழ்ந்த பிசிசிஐ துணைத் தலைவர்!
இலங்கை வீரர் சோனல் தினுஷாவின் பேட்டிங் பற்றி பிசிசிஐ துணைத் தலைவர் கூறியிருப்பதாவது...

சோனல் தினுஷா, ராஜீவ் சுக்லா - படங்கள்: ஏபி, பிடிஐ
இலங்கை வீரர் சோனல் தினுஷாவின் பேட்டிங் பற்றி பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா மிகவும் புகழ்ந்து கூறி வருகிறார். சச்சினைப் போல இருக்கிறார் எனக் கூறியுள்ளது கவனம் பெற்றுள்ளது.
கொழும்பில் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட்டில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 503/9 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. அடுத்து பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியாவைவிட 200 ரன்கள் குறைவாக இருப்பதால் இலங்கை அணி ஃபாலோ ஆன் விதியின்படி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாட ஷுப்மன் கில் பணித்தார்.
தற்போது இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்தாம் நாளில் 140 ஓவர்களில் 394/8 ரன்கள் குவித்து, 181 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.
இலங்கை வீரர் சோனல் தினுஷா சதம் அடித்து 104* ரன்களுடன் விளையாடி வருகிறார். இவரது பேட்டிங் திறமையை பலரும் பாராட்டி வருகிறார்கள். இரண்டு டெஸ்ட்டில் மூன்றாவது சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவின் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
இலங்கையின் சோனல் தினுஷா அற்புதமான வீரர். சச்சின் டெண்டுல்கர் போல விளையாடுகிறார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அற்புதமான வீரராக வலம் வருவார் எனக் கூறியுள்ளார்.
This Sonal of Srilanka is an amazing player. Looking like Tendulkar. Can be a wonderful test player in international cricket. @OfficialSLC
— Rajeev Shukla (@ShuklaRajiv) August 27, 2026
Summary
"Looking like Tendulkar": BCCI VP Shukla hails Sri Lankan batter Dinusha as consistent run continues at Colombo
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





