மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கேப்டன் பதவியிலிருந்து விலக தோனி எப்போது முடிவெடுத்தார்?

கேப்டன் பதவியிலிருந்து விலக தோனி முடிவெடுத்தது குறித்து சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பேட்டியளித்துள்ளார்.

News image
Updated On :24 மார்ச் 2022, 12:12 pm

DIN

கேப்டன் பதவியிலிருந்து விலக தோனி முடிவெடுத்தது குறித்து சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பேட்டியளித்துள்ளார்.

ஐபிஎல் போட்டி மார்ச் 26-ல் தொடங்கி மே 29 அன்று நிறைவுபெறவுள்ளது. முதல் ஆட்டத்தில் சிஎஸ்கேவும் கேகேஆரும் மோதவுள்ளன.

ஐபிஎல் 2022 போட்டியில் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வருட ஐபிஎல் போட்டியில் கேப்டனாக அல்லாமல் வீரராக மட்டுமே விளையாட தோனி முடிவெடுத்துள்ளார். இதையடுத்து புதிய கேப்டனுடன் ஐபிஎல் போட்டியில் களமிறங்குகிறது சிஎஸ்கே அணி. 2012 முதல் சிஎஸ்கே அணியில் விளையாடும் ஜடேஜா, அந்த அணியின் 3-வது கேப்டன் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். 

தோனியின் இந்த முடிவு பற்றி அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், கிரிக்இன்ஃபோ இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தற்போது ஜடேஜா அபாரமாக விளையாடி வருகிறார். சிஎஸ்கே அணிக்கு அவர் தலைமை தாங்க இதுவே சரியான நேரம் என்றார் தோனி.  இன்று காலை பயிற்சிக்குச் செல்லும் முன்பு அணி வீரர்களுடனான கூட்டத்தில் தன் முடிவைத் தெரிவித்தார் தோனி. இதைப் பற்றி அவர் யோசித்து வந்துள்ளார். அணிக்கு எது நல்லதாக இருக்கும் என எண்ணுவாரோ அதையே தோனி செய்வார். ஜடேஜா கேப்டனாவது குறித்த பேச்சு வருவது முதல்முறையல்ல. கடந்த வருடம் இதுகுறித்த பேச்சு நடைபெற்றது. தோனிக்கு அடுத்து சிஎஸ்கே கேப்டனாக ஜடேஜாவே பொருத்தமான நபர் என்பது எங்களுக்குத் தெரியும். விராட் கோலியை எப்படி இந்திய அணி கேப்டன் பதவிக்கு தோனி தயார் செய்தாரோ அதேபோல தான் ஜடேஜாவையும் இதற்கு ஏற்றாற்போல உருவாக்கினார். ஜடேஜாவுக்கு தோனியின் வழிகாட்டுதல் எப்போதும் இருக்கும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.