பிருத்வி ஷாவுக்கு என்ன ஆச்சு?: ரிஷப் பந்த் பதில்

இந்த நிலையை எங்களால் கட்டுப்படுத்த முடியாது.
பிருத்வி ஷாவுக்கு என்ன ஆச்சு?: ரிஷப் பந்த் பதில்

உடல்நலக்குறைவால் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பிருத்வி ஷா விளையாடவில்லை என தில்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் கூறியுள்ளார்.

நவி மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தில்லி அணி. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. அஸ்வின் 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் அரை சதமெடுத்தார். இதன்பிறகு விளையாடிய தில்லி அணி, 18.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மிட்செல் மார்ஷ் 89, வார்னர் ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் எடுத்தார்கள்.

மே 1 அன்று கடைசியாக லக்னெளவுக்கு எதிராக விளையாடினார் தில்லி வீரர் பிருத்வி ஷா. அதன்பிறகு அவர் மீண்டும் விளையாடவில்லை. இதுபற்றி தில்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் கூறியதாவது:

இந்த ஆட்டத்தில் பிருத்வி ஷாவின் பங்களிப்பு எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனால் இந்த நிலையை எங்களால் கட்டுப்படுத்த முடியாது. அவருக்கு டைபாயிடோ அல்லது வேறு ஏதோவொரு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறினார்கள் என்றார். மேலும் அணியின் வெற்றி பற்றி அவர் கூறியதாவது: நாங்கள் முதலில் பந்துவீசியது மகிழ்ச்சியளித்தது. 140-160 ரன்கள் நல்ல ஸ்கோர். அதை நாங்கள் அடைந்துவிட்டோம். ஃபீல்டிங் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். இது எங்களுக்கு மிகச்சிறப்பான ஆட்டமாக அமைந்துவிட்டது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com