திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

முதல் முறை போன்று தெரியவில்லை; ஷுப்மன் கில்லுக்கு சாய் கிஷோர் புகழாரம்!

ஷுப்மன் கில் முதல் முறையாக அணியை வழிநடத்துவது போன்று தெரியவில்லை என சாய் கிஷார் தெரிவித்துள்ளார்.

News image

படம் | AP

Updated On :25 மார்ச் 2024, 6:35 pm IST

ஷுப்மன் கில் முதல் முறையாக அணியை வழிநடத்துவது போன்று தெரியவில்லை என சாய் கிஷார் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அசத்தலான வெற்றியைப் பதிவு செய்தது. இதன்மூலம், ஷுப்மன் கில் கேப்டன் பொறுப்பை வெற்றியுடன் தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில், ஷுப்மன் கில் முதல் முறையாக அணியை வழிநடத்துவது போன்று தெரியவில்லை என சாய் கிஷார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஷுப்மன் கில் அணியை சிறப்பாக வழிநடத்தினார். அவர் முதல் முறை கேப்டனாக செயல்படுவது போன்று தெரியவில்லை. போட்டியின்போது அவர் கொடுத்த அறிவுரைகள் மிகவும் சிறப்பானதாகவும், உதவிகரமானதாகவும் இருந்தது என்றார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (மார்ச் 26) நடைபெறும் போட்டியில் குஜாரத் டைட்டன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.