பாரீஸ் ஒலிம்பிக்ஸ்: டேபிள் டென்னிஸ் வீராங்கனை தோல்வி!

பாரீஸ் ஒலிம்பிக்ஸில் டேபிள் டென்னிஸ் மணிகா பத்ரா தோல்வியை தழுவி வெளியேறினார்.
மணிகா பத்ரா
மணிகா பத்ரா
Published on
Updated on
1 min read

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் தோல்வியடைந்தார்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா 16 ஆவது பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் 4-1 என்ற கணக்கில் ஜப்பானின் மியு ஹிரானோவிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.

மணிகா பத்ரா
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் வில்வித்தை: இந்திய வீராங்கனை அசத்தல்!

சௌத் பாரீஸ் அரங்கில் 47 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் எட்டாம் நிலை வீரரான ஹிரானோ 11-6, 11-9, 12-14, 11-8, 11-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார்.

ஒலிம்பிக் வரலாற்றில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய டேபிள் டென்னிஸ் ஒற்றையர் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் மணிகா பத்ரா.

மணிகா பத்ரா
ஒலிம்பிக்: இறுதிச் சுற்றுக்கு தேர்வான ஸ்வப்னிலுக்கும் தோனிக்கும் இவ்வளவு ஒற்றுமைகளா?

மணிகாவை வென்ற ஹிரானோ 1 வெள்ளிப் பதக்கம் மற்றும் இரண்டு யூத் ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.

29 வயதான மணிகா பத்ரா, முந்தைய சுற்றுகளில், பிரான்ஸின் பிரித்திகா பவடே மற்றும் கிரேட் பிரிட்டனின் அன்னா ஹர்சி ஆகியோரை வீழ்த்தினார். 2020 இல் நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் 32 வது கட்டத்தில் மணிகா பத்ரா வெளியேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com