மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

பாரீஸ் ஒலிம்பிக்ஸ்: டேபிள் டென்னிஸ் வீராங்கனை தோல்வி!

பாரீஸ் ஒலிம்பிக்ஸில் டேபிள் டென்னிஸ் மணிகா பத்ரா தோல்வியை தழுவி வெளியேறினார்.

News image

மணிகா பத்ரா

Updated On :31 ஜூலை 2024, 9:56 pm IST

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் தோல்வியடைந்தார்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா 16 ஆவது பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் 4-1 என்ற கணக்கில் ஜப்பானின் மியு ஹிரானோவிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.

சௌத் பாரீஸ் அரங்கில் 47 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் எட்டாம் நிலை வீரரான ஹிரானோ 11-6, 11-9, 12-14, 11-8, 11-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார்.

ஒலிம்பிக் வரலாற்றில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய டேபிள் டென்னிஸ் ஒற்றையர் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் மணிகா பத்ரா.

மணிகாவை வென்ற ஹிரானோ 1 வெள்ளிப் பதக்கம் மற்றும் இரண்டு யூத் ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.

29 வயதான மணிகா பத்ரா, முந்தைய சுற்றுகளில், பிரான்ஸின் பிரித்திகா பவடே மற்றும் கிரேட் பிரிட்டனின் அன்னா ஹர்சி ஆகியோரை வீழ்த்தினார். 2020 இல் நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் 32 வது கட்டத்தில் மணிகா பத்ரா வெளியேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.