பரபரப்பான ஆட்டத்தில் தமிழகத்தை வீழ்த்திய மும்பை! அஸ்வின் 3 விக்கெட்டுகள்!
மிழக அணியின் சிறப்பான பந்துவீச்சால் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கடைசியில் 2 விக்கெட் வித்தியாசத்தில்...


தமிழக அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
சென்னையில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அஸ்வின் 41 ரன்களும் ஜெகதீசன் 31 ரன்களும் எடுத்தார்கள். இதர தமிழக வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். இதனால் தமிழக அணி 49.3 ஓவர்களில் 183 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தவல் குல்கர்னி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
எளிதான இலக்கு என்றாலும் தமிழக அணியின் சிறப்பான பந்துவீச்சால் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கடைசியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மும்பை. அந்த அணி 48.5 ஓவர்களில் 184 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சுபம் ரன்ஜனே 59 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார். தமிழக அணியின் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கே.விக்னேஷ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...