கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.
தில்லி கேபிடல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையிலான ஆட்டம் சமனில் முடிந்ததையடுத்து, சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது. ஆட்டத்தின்போது பஞ்சாப் அணி 2-வது பேட்டிங் பிடித்ததால், சூப்பர் ஓவரில் அந்த அணி முதல் பேட்டிங் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
சூப்பர் ஓவரில் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுலும், பூரனும் களமிறங்கினர். தில்லி அணிக்கு ரபாடா பந்துவீசினார்.
முதல் பந்தில் 2 ரன்கள் கிடைக்க, 2-வது பந்தை பவுன்சராக வீசினார். அதை தூக்கி அடிக்க முயன்ற ராகுல் ஆட்டமிழந்தார். இதையடுத்து, 3-வது பேட்ஸ்மேனாக மேக்ஸ்வெல் களமிறங்கினார். ஆனால், ஸ்டிரைக்கில் இருந்த பூரன் 3-வது பந்தில் போல்டானார். இதனால், பஞ்சாப் அணி 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து, தில்லியின் வெற்றிக்கு 3 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
தில்லி அணிக்கு ரிஷப் பந்த் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் களமிறங்கினர். முதல் பந்தில் பந்த் ரன் ஏதும் எடுக்கவில்லை. அடுத்த பந்தை ஷமி வைடாக வீச வெற்றிக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. அடுத்த பந்தில் பந்த் 2 ரன்கள் எடுக்க தில்லி அணி எளிதாக வெற்றி பெற்றது.
தில்லி பேட்டிங் விவரம்: கடைசி ஓவரில் 30 ரன்கள்: 21 பந்துகளில் ஸ்டாய்னிஸ் மிரட்டல் அரைசதம்
பஞ்சாப் பேட்டிங் விவரம்: சமனில் முடிந்தது தில்லி-பஞ்சாப் ஆட்டம்: சூப்பர் ஓவரில் முடிவு