திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

டி20 உலகக் கோப்பை: ஐபிஎல் போல இரண்டரை நிமிட இடைவேளை அறிமுகம்

ஐபிஎல் போல ஒவ்வொரு இன்னிங்ஸின் நடுவிலும் இடைவேளையை அறிமுகப்படுத்தவுள்ளது ஐசிசி...

News image
Updated On :18 அக்டோபர் 2021, 11:56 am IST

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஐபிஎல் போல ஒவ்வொரு இன்னிங்ஸின் நடுவிலும் இடைவேளையை அறிமுகப்படுத்தவுள்ளது ஐசிசி.

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்தபிறகு அதிலிருந்து தேர்வாகும் 4 அணிகள், ஏற்கெனவே தேர்வான 8 அணிகளுடன் இணைந்து பிரதான சுற்றான சூப்பர் 12-ல் அக்டோபர் 23 முதல் போட்டியிடவுள்ளன. 

இந்நிலையில் ஐபிஎல் போல டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் இடைவேளையை அறிமுகம் செய்யவுள்ளது ஐசிசி. ஐபிஎல் போட்டியில் 20 ஓவர்களில் இரண்டு முறை இடைவேளை விடப்படுகிறது. முதல் 6 முதல் 9 ஓவர்கள் வரை ஒரு இடைவேளையை ஃபீல்டிங் செய்யும் அணியும் 13 முதல் 16 ஓவர்கள் வரை ஒரு இடைவேளையை பேட்டிங் செய்யும் அணியும் தேர்வு செய்யலாம். 

அதேபோல டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் 10-வது ஓவரின் முடிவில் வீரர்களுக்கு இரண்டரை நிமிட இடைவேளை வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வானிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.