ஐசிசியின் 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
19 வயதுக்குள்பட்டோருக்கான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொண்டது. முதல் பேட்டிங் செய்த இங்கிலாந்து 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 47.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பை வென்றது.
இதையும் படிக்க | யு-19 உலகக் கோப்பை: 5-வது முறையாக வாகை சூடியது இந்திய அணி
உலகக்கோப்பை வென்ற இளம் இந்திய அணிக்கு நாடு முழுவதிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் ட்விட்டர் பதிவு:
"இளம் கிரிக்கெட் வீரர்களை நினைத்து மிகவும் பெருமையாக உள்ளது. ஐசிசியின் 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். தொடர் முழுவதும் துணிச்சலை வெளிப்படுத்தியுள்ளனர். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் பாதுகாப்பான மற்றும் திறமையான கரங்களில் உள்ளதை இது வெளிப்படுத்துகிறது."