தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கேப்டன் கே.எல். ராகுல் செய்த தவறு: கவாஸ்கர் விமர்சனம்

இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுலின் தவறான உத்தியால் தெ.ஆ. கேப்டன் டீன் எல்கர் அதிக ரன்கள் எடுத்ததாக முன்னாள் வீரர் கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 9:56 am

DIN

இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுலின் தவறான உத்தியால் தெ.ஆ. கேப்டன் டீன் எல்கர் அதிக ரன்கள் எடுத்ததாக முன்னாள் வீரர் கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார்.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது. எனினும் ஜொகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 2-வது டெஸ்டை தென்னாப்பிரிக்க அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 240 ரன்கள் இலக்கை விரட்டியபோது தெ.ஆ. கேப்டன் எல்கர் 96 ரன்களும் வான் டர் டுசென் 40 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார்கள். ஆட்ட நாயகனாக எல்கர் தேர்வானார். 3-வது டெஸ்ட், கேப் டவுனில் ஜனவரி 11 அன்று தொடங்குகிறது.

இந்நிலையில் கோலிக்குப் பதிலாக இந்திய அணியின் கேப்டனாகப் பணியாற்றிய கே.எல். ராகுல் பற்றி முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான சுநீல் கவாஸ்கர், தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

விராட் கோலி விளையாடாத டெஸ்டில் இந்திய அணி முதல்முறையாகத் தோற்றுள்ளது. கே.எல். ராகுலைப் பற்றி சொல்லவேண்டும் என்றால், டீன் எல்கரின் இன்னிங்ஸில் அவருக்கு ஆரம்பத்தில் சுலபமாக ஒரு ரன்னைப் பலமுறை எடுக்க உதவினார். இதனால் விளையாடுவது எல்கருக்குச் சுலபமாக இருந்தது. ஹூக் ஷாட்டை எல்கர் அவ்வளவாக விளையாட மாட்டார். அதனால் எல்லைக்கோட்டுக்கு அருகே இரு ஃபீல்டர்களை நிற்கவைத்ததில் அர்த்தமில்லை. இதனால் ஒரு ரன்னை அடிக்கடி எடுத்து நிறைய ரன்களை எல்கர் ஸ்கோர் செய்தார். இந்திய அணியின் ஃபீல்டிங்கும் சிறப்பாக இருந்திருக்கலாம். இந்தியா தோற்றது என்பதை விட 2-வது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது என்பதே சரி என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.