கோலியின் தலைமையில் நான் விளையாடியிருந்தால்...: ஸ்ரீசாந்த்

2011-ல் சச்சினுக்காக உலகக் கோப்பையை வென்றோம் என்றார்.     
கோலியின் தலைமையில் நான் விளையாடியிருந்தால்...: ஸ்ரீசாந்த்
Published on
Updated on
1 min read

விராட் கோலியின் தலைமையில் நான் விளையாடியிருந்தால் இந்திய அணி மூன்று உலகக் கோப்பைகளை வென்றிருக்கும் என முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த். இந்திய அணிக்காக 27 டெஸ்டுகள், 53 ஒருநாள், 10 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 169 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 

ஒரு பேட்டியில் விராட் கோலி பற்றி ஸ்ரீசாந்த் கூறியதாவது:

2011க்குப் பிறகு நாம் உலகக் கோப்பையை வெல்லவில்லை. விராட் கோலியின் தலைமையில் நான் விளையாடியிருந்தால் இந்திய அணி 2015, 2019 & 2021 என மூன்று உலகக் கோப்பைகளை வென்றிருக்கும். 2011-ல் சச்சினுக்காக உலகக் கோப்பையை வென்றோம் என்றார்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com