மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இதுதான் சிஎஸ்கேவின் பேட்டிங் வரிசையா?: பயிற்சி முகாமில் வெளிப்பட்ட அணியின் திட்டம்

முதல் ஆட்டத்தில் சிஎஸ்கேவின் பேட்டிங் வரிசை எப்படியிருக்கப் போகிறது?

News image
Updated On :21 மார்ச் 2022, 11:05 am

DIN

இந்த வாரம் முதல் ஐபிஎல் 2022 போட்டி தொடங்குகிறது.

மார்ச் 26 அன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸும் கொல்கத்தா நைட்ரைடர்ஸும் மோதுகின்றன.

கடந்த வருடப் போட்டியின் இறுதிச்சுற்றில் இரு அணிகளும் மோதியதில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்று ஐபிஎல் கோப்பையை வென்றது. 

அந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணியில் விளையாடிய டு பிளெஸ்சிஸ், ஷர்துல் தாக்குர், ஹேசில்வுட் ஆகிய மூவரும் வேறு அணிகளுக்குத் தேர்வாகியுள்ளார்கள். காயம் காரணமாக தீபக் சஹார் பாதி ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் முதல் ஆட்டத்தில் சிஎஸ்கேவின் பேட்டிங் வரிசை எப்படியிருக்கப் போகிறது?

சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் கிடைத்த தகவல்களைக் கொண்டு பார்க்கும்போது இதுதான் பேட்டிங் வரிசை என்று கூறப்படுகிறது. வலது, இடது கை பேட்டர்கள் கிட்டத்தட்ட சமமாக இருப்பதால் அது பேட்டிங் செய்கிறபோது அணிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

கான்வே
ருதுராஜ் கெயிக்வாட்
உத்தப்பா
மொயீன் அலி
ராயுடு
ஜடேஜா
தோனி

இவர்கள் ஏழு பேரும் தான் சிஎஸ்கேவின் முதல் ஏழு பேட்டர்களாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. பந்துவீச்சாளர்களாக பிராவோ/ஜார்டன், ஆடம் மில்ன், கே.எம். ஆசிஃப், ஷிவம் டுபே/ராஜ்வர்தன் ஹங்கர்கேக்கர் ஆகியோர் இருக்க வாய்ப்புண்டு. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.