கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இந்தியாவின் தோல்விக்குக் காரணம் இதுதான்: மனம் திறந்த கேப்டன் ஷிகர் தவன்

இந்திய அணி முதல் ஒருநாள் ஆட்டத்தில் தோல்வியடைந்தது குறித்து கேப்டன் ஷிகர் தவன் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

News image
Updated On :25 நவம்பர் 2022, 11:12 am

DIN

இந்திய அணி முதல் ஒருநாள் ஆட்டத்தில் தோல்வியடைந்தது குறித்து கேப்டன் ஷிகர் தவன் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது நியூசிலாந்து அணி. ஆக்லாந்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன், ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகிய இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார்கள். 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயர் ஐயர் 76 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 80 ரன்களும் ஷிகர் தவன், 77 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 72 ரன்களும் ஷுப்மன் கில் 50 ரன்களும் எடுத்தார்கள். வாஷிங்டன் சுந்தர் 16 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்து அசத்தினார். 

47.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நியூசிலாந்து அணி. டாம் லதம் 145, வில்லியம்சன் 94 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இருவரும் 27.2 ஓவர்களில் 221 ரன்கள் கூட்டணி அமைத்து நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற உதவினார்கள். ஆட்ட நாயகன் விருதை டாம் லதம் வென்றார். 2-வது ஒருநாள் ஆட்டம் ஞாயிறன்று ஹேமில்டனில் நடைபெறவுள்ளது.

இந்திய அணியின் தோல்வி பற்றி கேப்டன் ஷிகர் தவன் கூறியதாவது:

நிறைய ஷார்ட் பந்துகளை நாங்கள் வீசினோம். அதை நன்குப் பயன்படுத்தி ரன்கள் எடுத்தார் டாம் லதம். சில பந்துகளைச் சரியாக ஃபீல்டிங் செய்யவில்லை. லதமுக்கு ஷார்ட் பந்துகளை வீசியதால் ஆட்டம் எங்கள் கையை விட்டுப் போய்விட்டது. 40-வது ஓவரில் லதம் 4 பவுண்டரிகளை அடித்தார். அங்கு தான் ஆட்டம் வேறு திசைக்குச் சென்றது. இந்த ஆட்டத்திலிருந்து எங்கள் அணி வீரர்கள் நிறைய பாடங்களைக் கற்றுக் கொண்டிருப்பார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.