இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டி20 ஆட்டத்தில் 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று (ஜூலை 9) எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரவிந்திர ஜடேஜா 46 (29), ரோஹித் சர்மா 31 (20) ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்தின் கிரிஸ் ஜோர்டன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையும் படிக்க | ஐடேஜா அபாரம்: இந்தியா 170 ரன்கள் குவிப்பு
தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 17 ஓவர்களில் 121 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்-அவுட் ஆனது. இந்தியாவில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து தொடரை கைப்பற்றியது.