இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டி (ஐஎஸ்எல்) இல் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது ஹைதராபாத் எஃப்சி அணி.
ஹைதராபாதில் சனிக்கிழமை இரவு ஹைரதாபாத் எஃப்சி- எஃப்சி கோவா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது.
இரு அணிகளும் இந்த சீசனில் இதுவரை தோற்காத அணிகள் என்ற பெருமையுடன் களத்தில் இறங்கின. சொந்த மைதானத்தில் களமிறங்கிய ஹைதராபாத் அணி தொடக்கம் முதலே ஆட்டத்தை கட்டுக்குள் வைத்திருந்தது.
10-ஆவது நிமிஷத்தில் நைஜீரிய வீரா் பாா்த்தோலோமியு கடத்தி அனுப்பிய பந்தை பிசகாமல் கோலாக்கினாா் ஹைதராபாத் வீரா்
ஜேவியா் சிவெரியோ. முதல் பாதியில் பந்தை பெரும்பாலும் தன் வசம் வைத்திருந்த கோவா அணியால் கோல் போட முடியவில்லை.
இரண்டாம் பாதியில் 83-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்காமல் கோல் கம்பத்துக்கு வெளியே அடித்தாா் அதன் வீரா் அல்வரோ வாஸ்கீஸ்.
கூடுதல் நிமிஷத்தில் கோலடிக்க கிடைத்த வாய்ப்பை தவற விட்டாா் எடு பெடியா. இறுதியில் 1-0 என வெற்றி பெற்ற ஹைதராபாத் 10 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது. எஃப்சி கோவா அணி 4-ஆம் இடத்தில் உள்ளது.