உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னையில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இணையதளத்தில் இன்று தொடங்கவுள்ளது.
ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறவுள்ளது.
இதுவரை பிற நாடுகளுடன் இணைந்து உலகக் கோப்பை போட்டியை நடத்திவந்த இந்தியா, முதல்முறையாக தனியாக நடத்துகின்றது.
குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் போட்டியில் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டிகளை காண்பதற்கான டிக்கெட் ‘புக் மை ஷோ’ செயலியில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஏற்கெனவே முதல் இரண்டு நாள்கள் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது.
இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அக்டோபர் 8-ஆம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று இரவு 8 மணிக்கு புக் மை ஷோவில் தொடங்கிறது.
ஏற்கெனவே, மாஸ்டர் கார்டு பயனாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட டிக்கெட்டுகள் நேற்றைய முன்தினமே விற்றுத் தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் அக்டோபர் 14-ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 3-ஆம் தேதி தொடங்குகிறது.