இந்திய அணி தற்போது டி20, ஒருநாள், டெஸ்ட் தொடா்களில் ஆடுவதற்காக தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது. முதலில் டி20 தொடா் முடிந்தது, அதை சமன் செய்தது இந்தியா.
இதன் தொடா்ச்சியாக 3 ஆட்டங்கள் ஒருநாள் தொடா் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வாண்டரா்ஸ் மைதானத்தில் முதல் ஆட்டம் தொடங்கியுள்ளது.
இதையும் படிக்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை எடுத்த நேதன் லயன்!
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்தது. இந்தியாவின் வேகப் பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப், ஆவேஷ் கான் பந்து வீச்சில் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளும் ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தியுள்ளார்கள். 14 ஓவர் முடிவில் 60/7 ரன்கள் எடுத்துள்ளது.
தென்னாப்பிரிக்கா சார்பில் டோனி டி ஜோர்ஜி (28), மார்கரம் (12) மட்டுமே இரண்டு இலக்க ரன்கள் எடுத்தார்கள். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்தார்கள்.