முதல் இன்னிங்ஸில் ஆஸி. 263 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 262 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்கத்திலேயே கவாஜா ஜடேஜா பந்தில் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்து ஆடிய டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுசேன் சிறப்பாக விளையாடினர். ஆனால் இந்த ஜோடி வீழ்ந்தது ஆஸி. அணியே தடுமாறியது.
ஹெட் 43 ரன்களும், லபுசேன் 35 ரன்களும் எடுத்தனர். மற்ற 9 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். ஸ்மித்-9, கவாஜா-6, ரென்ஷா-2, ஹேன்ஸ்கோம்ப்-0, அலெக்ஸ் கேரி-7, கம்மின்ஸ்-0, லயன் -8, மர்ஃபி-3, குஹென்மன் -0.
இதையும் படிக்க: ரஞ்சி கோப்பை: சௌராஷ்டிரா அணி சாம்பியன்!
ஜடேஜா சிறப்பாக பந்து வீசி 7 விக்கெட்டுகளை எடுத்தார். அஸ்வின் 3 விக்கெட்டுகள் எடுத்தார். 113 ரன்களுக்கு ஆஸி. அணி சுருண்டது. 114 ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
115 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 26.4 ஓவரில் 118/4 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோஹித் அதிரடியாக 20 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். புஜாரா 31 ரன்களும், பரத் 23 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர்.
இதையும் படிக்க: இணையத்தை ஆக்கிரமிக்கும் கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்!
லயன் 2 விக்கெட்டுகளும், மர்ஃபி 1 விக்கெட்டும் எடுத்தனர். 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் 2-0 என இந்தியா முன்னிலை வகித்துள்ளது.
மீதமுள்ள 2 போடிகளில் ஆஸி. வென்றாலும் இந்தியாவிடம்தான் கோப்பை இருக்கும். தொடர்ந்து 4வது முறையாக பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்தியா தன்வசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆட்டநாயகனாக ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார்.