பாரா ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லேகாரா தங்கப் பதக்கம் வென்றார்.
சீனாவில் அக்.22ஆம் தேதி தொடங்கிய பாரா ஒலிம்பிக் போட்டிகள் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவிலிருந்து 303 வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இரண்டாவது நாளான இன்று (அக். 23) துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் அவனி லேகாரா பங்கேற்றார். இவர் 249.6 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றதோடு, பாரா ஒலிம்பிக்கில் சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் ருத்ரனேஷ் கந்தேல்வால் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இதேபோன்று உயரம் தாண்டுதல் பிரிவில் 1.82 மீட்டர் தூரம் தாண்டி இந்தியாவின் ஷைலேஷ் குமார் தங்கப் பதக்கம் வென்றார். நீளம் தாண்டுதல் போட்டியில் நிஷாத் 2.02 மீட்டர் தூரத்திற்கு நீளம் தாண்டி தங்கம் வென்றார்.
ஆண்களுக்கான 5000 மீட்டர்-டி11 பிரிவில் அங்கூர் தாமா இந்தியாவுக்கு ஐந்தாவது தங்கப் பதக்கத்தை வென்றார். தற்போதுவரை இந்தியா, 5 தங்கம், 6 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முன்னேற்றத்தை சாத்தியப்படுத்திய தொழில்நுட்பம்

10,778 நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை

பொறியியல் கலந்தாய்வு: 89,629 மாணவா்கள் விண்ணப்பம்

முதல்வரின் நேரடி கண்காணிப்பில் சிங்கப்பெண் அதிரடிப்படை: அரசாணை வெளியீடு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

