நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா கிரிக்கெட் விளையாடுவதற்கு திரும்பியுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின்போது ஹார்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டது. அதன்பின், அவர் உலகக் கோப்பைத் தொடரிலிருந்து விலகினார். காயம் காரணமாக அவர் ஓய்வெடுத்து வந்தார். இதற்கிடையில், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பாண்டியா நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா கிரிக்கெட் விளையாடுவதற்கு திரும்பியுள்ளார்.
டி.ஒய்.பாட்டீல் டி20 கோப்பைத் தொடரில் ரிலையன்ஸ் ஒன் அணிக்காக ஹார்திக் பாண்டியா விளையாடினார். மூன்று ஓவர்கள் வீசிய அவர் 22 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
உலகக் கோப்பைக்குப் பிறகு கிரிக்கெட் விளையாடமலிருந்த இஷான் கிஷனும் மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்பவுள்ளார். அவர் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அணிக்காக விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.