ஐசிசியின் டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீராங்கனைகளுக்கான போட்டியில் இந்திய மகளிரணியின் இரண்டு வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.
டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களது பெயர்களை ஐசிசி வெளியிட்டுள்ளது.
அந்தப் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகளான ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் தீப்தி சர்மாவின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் 41 வயதாகும் ஜிம்பாப்வே வீராங்கனை பிரீசியஸ் மரங்கே இடம்பெற்றுள்ளார்.
இவர்கள் மூவரில் டிசம்பர் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதினை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.