காலிறுதிக்கு தகுதிபெற்ற குரோசியா..! ரொனால்டோ பங்கேற்காதது ஏன்?

நேஷ்னல் லீக் போட்டியில் போர்ச்சுகலுக்கு எதிரான போட்டியில் டிரா செய்த குரோசியா அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
குரோசியா அணி
குரோசியா அணிDarko Bandic
Published on
Updated on
1 min read

நேஷ்னல் லீக் போட்டியில் போர்ச்சுகலுக்கு எதிரான போட்டியில் டிரா செய்த குரோசியா அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு இடையேயான கால்பந்து போட்டிகளில் போர்ச்சுகல் - குரோசியா அணிகள் இன்று நள்ளிரவு மோதின.

இந்தப் போட்டியில் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதனால் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது குரோசியா அணி.

போர்ச்சுகல் சார்பாக 33 ஆவது நிமிஷத்தில் பெலிக்ஸும் குரோசியா சார்பாக கவார்டியோல் 65ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தார்கள்.

இந்தப் போட்டியில் போர்ச்சுகலின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பங்கேற்கவில்லை. ஏற்கனேவ, போர்ச்சுகல் அணி காலிறுதிக்கு தகுதிபெற்றதால் காயம் ஏற்படாமல் இருக்க ஓய்வளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

குரூப்1 பிரிவில் போர்ச்சுகல் 14 புள்ளிகளுடன் முதலிடத்திலும் குரோசியா 8 புள்ளிகளுடன் 2ஆம் இடத்திலும் இருக்கின்றன.

பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின், போர்ச்சுகல், குரோசியா, டென்மார்க், நெதர்லாந்து ஆகிய அணிகள் காலிறுதுக்கு தகுதி பெற்றுள்ளன. மார்ச் 20-23ஆம் தேதிகளில் இது நடைபெறும்.

2026ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பைக்கும் இதில் வரும் 8 அணிகள் தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com