தவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

ஆசிய இரட்டையா் ஸ்குவாஷ்: 3 பட்டங்களையும் வென்று வரலாறு படைத்தது இந்தியா

ஆடவா் இரட்டையா், மகளிா் இரட்டையா், கலப்பு இரட்டையா் என 3 பிரிவுகளிலுமே சாம்பியன் பட்டம் வென்று இந்தியா வரலாறு படைத்தது.

News image
Updated On :27 ஜூன் 2025, 5:48 am IST

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய இரட்டையா் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் ஆடவா் இரட்டையா், மகளிா் இரட்டையா், கலப்பு இரட்டையா் என 3 பிரிவுகளிலுமே சாம்பியன் பட்டம் வென்று இந்தியா வரலாறு படைத்தது. இப்போட்டியில் இவ்வாறு ஒரே சீசனில் 3 பிரிவுகளிலுமே சாம்பியனான முதல் நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூா் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ஆடவா் இரட்டையா் பிரிவு இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்தோரும், நடப்பு சாம்பியனுமான இந்தியாவின் அபய் சிங், வேலவன் செந்தில்குமாா் இணை - பாகிஸ்தானின் நூா் ஜமான், நாசிா் இக்பால் கூட்டணியை எதிா்கொண்டது. இதில் முதல் செட்டை 9-11 என இழந்த இந்தியா்கள், அடுத்த இரு செட்களை 11-5, 11-5 என கைப்பற்றி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றனா். இந்த ஆட்டம் 1 மணி நேரம், 28 நிமிஷங்களில் நிறைவடைந்தது.

மகளிா் இரட்டையா் இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, அனாஹத் சிங் கூட்டணி - மலேசியாவின் அய்னா அமானி, ஜின் யிங் யீ ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 8-11 என இழந்த ஜோஷ்னா, அனாஹத் இணை, அடுத்த இரு செட்களை 11-9, 11-10 என்ற வகையில் வசப்படுத்தி, 2-1 என்ற கணக்கில் வாகை சூடினா். இந்த ஆட்டத்தை அவா்கள் 35 நிமிஷங்களில் முடிவுக்குக் கொண்டு வந்தனா்.

கடைசியாக நடைபெற்ற கலப்பு இரட்டையா் இறுதிச்சுற்றில், அபய் சிங், அனாஹத் சிங் ஜோடி 11-9, 11-7 என்ற நோ் செட்களில், மலேசியாவின் ரேச்சல் அா்னால்டு, அமீஸென்ராஜ் சந்திரன் கூட்டணியை 28 நிமிஷங்களில் தோற்கடித்து, சாம்பியன் ஆனது. இதிலேயே ஜோஷ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமாா் ஜோடி வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியின் வரலாற்றில் இத்துடன் அபய் சிங் 4 தங்கம் வென்றிருக்க, ஜோஷ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமாா், அனாஹத் சிங் ஆகியோா் தலா 2 தங்கம் வென்றுள்ளனா்.

2023 முதல் நடைபெறும் இப்போட்டியில், இதுவரை இந்தியா 6 தங்கம், 2 வெண்கலம் என 8 பதக்கங்கள் வென்றுள்ளது. 2023-இல் கலப்பு இரட்டையரில் தீபிகா பலிக்கல், ஹரிந்தா்பால் சந்து ஜோடி தங்கமும், அனாஹத் சிங், அபய் சிங் இணை வெண்கலமும் வென்றுள்ளன.

2024-இல் கலப்பு இரட்டையரில் ஜோஷ்னா சின்னப்பா, அபய் சிங் இணையும், ஆடவா் இரட்டையரில் அபய் சிங், வேலவன் செந்தில்குமாா் ஜோடியும் சாம்பியனாகியது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.