இந்தியா்கள் வெளியேற்றம்


ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டனில், இந்தியாவின் பிரதான போட்டியாளா்கள் பலா் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினா்.
மகளிா் ஒற்றையா் பிரிவில், உன்னதி ஹூடா 12-21, 18-21 என்ற நோ் கேம்களில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் தாய்லாந்தின் பான்பவீ சோசுவாங்கிடம் வீழ்ந்தாா்.
மகளிா் இரட்டையரில், டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் இணை 15-21, 21-15, 18-21 என்ற வகையில், ஜப்பானின் சயாகா ஹிரோடா/அயாகோ சகுரமோடோ கூட்டணியிடம் வெற்றியை இழந்தது.
ஆடவா் இரட்டையரில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி ஜோடி 21-23, 12-21 என்ற கேம்களில், மலேசியாவின் காய் ஜிங் காங்/ஆரோன் டா இணையிடம் தோல்வியுற்றது.
கலப்பு இரட்டையா் பிரிவில், ரோஹன் கபூா்/ருத்விகா ஷிவானி இணை 12-21, 15-21 என்ற கணக்கில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் பிரான்ஸின் தாம் ஜிஸ்கெல்/டெல்ஃபின் டெல்ரு கூட்டணியிடம் தோல்வி கண்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...