சென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

டி20 உலகக் கோப்பை: மே.இ. தீவுகள் அணியில் புதிய வீரர் சேர்ப்பு

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஃபேபியன் ஆலனுக்குப் பதிலாக அகேல் ஹுசைன் தேர்வாகியுள்ளார்.

Published On :

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஃபேபியன் ஆலனுக்குப் பதிலாக அகேல் ஹுசைன் தேர்வாகியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்தபிறகு அதிலிருந்து தேர்வாகும் 4 அணிகள், ஏற்கெனவே தேர்வான 8 அணிகளுடன் இணைந்து பிரதான சுற்றான சூப்பர் 12-ல் அக்டோபர் 23 முதல் போட்டியிடவுள்ளன. 

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஃபேபியல் ஆலன் இடம்பெற்றிருந்தார். எனினும் காயம் காரணமாக அவரால் அப்போட்டியில் பங்கேற்க முடியவில்லை. இதையடுத்து இடக்கை சுழற்பந்து வீச்சாளர் அகேல் ஹுசைன், மே.இ. தீவுகள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்று வீரராக மே.இ. தீவுகள் அணியில் இடம்பெற்றிருந்த அகேல் ஹுசைன், 9 ஒருநாள், 6 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இதையடுத்து மாற்று வீரராக 26 வயது குடகேஷ் மோட்டீ  அணியில் இடம்பெற்றுள்ளார். 

சூப்பர் 12 சுற்றின் முதல் நாளான அக்டோபர் 23 அன்று மேற்கிந்தியத் தீவுகள் - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.