கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

தவறி விழுந்து கல்லூரி மாணவர் சாவு

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கல்விப் பயிற்சிக்காக வந்த சென்னையைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் சனிக்கிழமை விடுதியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 8:30 pm

தினமணி

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கல்விப் பயிற்சிக்காக வந்த சென்னையைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் சனிக்கிழமை விடுதியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

சென்னை தாம்பரத்தில் உள்ள ஜெருசலேம் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு சிவில் படிக்கும் 133 மாணவர்கள் கல்விப் பயிற்சிக்காக வெள்ளிக்கிழமை ஏற்காடு வந்தனர்.

ஏற்காடு படகு இல்லம் அருகேயுள்ள தனியார் விடுதியில் அவர்கள் தங்கினர். இந்த நிலையில், சென்னை பல்லாவரம் அஞ்சல் அலுவலகத்தில் பணியாற்றும் அன்பழகன் மகன் விக்னேஷ்வரன் (20) வெள்ளிக்கிழமை இரவு அந்த விடுதியில் இருந்து தவறி விழுந்தாராம்.

இதையடுத்து, படுகாயமடைந்த அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஏற்காடு காவல் நிலைய ஆய்வாளர் ரவிசந்திரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.