தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

அப்துல்கலாம் மறைவு: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் இரங்கல்

சர்வமத நல்லிணக்க நாயகர் டாக்டர் அப்துல்கலாம் என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலாம் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

Updated On :28 ஜூலை 2015, 10:40 am

சர்வமத நல்லிணக்க நாயகர் டாக்டர் அப்துல்கலாம் என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலாம் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முன்னாள் குடியரசுத்தலைவர், விண்வெளித்துறை விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல்கலாம் மறைவு தேசத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். விண்வெளித்துறையில் அரிய சாதனைகளை நிகழ்ச்சி நாட்டிற்கு பெருமையைத் தேடித்தந்தவர்.

குழந்தைகளை, மாணவர்களை நேசிக்கும் அன்பே உருவானவர். மழலை மலர்களிடம் கேள்விகள் கேட்டுப்பெறுவதில் அலாதி அன்பு உடையவர். ஒப்பற்ற கல்வியாளர். சிறந்த சிந்தனையாளர். உலகின் தலைசிறந்த விஞ்ஞானி. சிறந்த குடியரசுத்தலைவர். சர்வமத நல்லிணக்க நாயகர். மனிதநேய பண்பாளர் என பன்முகங்கள் கொண்ட டாக்டர் அப்துல் கலாமின் இன்னுயிர் அமைதிபெற எல்லாம் வல்ல இறை அருளைப் பிரார்த்திக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.