கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: ஒருவர் சாவு: மூவர் காயம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சனிக்கிழமை தனியார் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மூவர் காயம் அடைந்தனர்.

News image
Updated On :21 மே 2016, 12:13 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சனிக்கிழமை தனியார் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மூவர் காயம் அடைந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் டி.மானகசேரி விலக்கிலிருந்து கிருஷ்ணப்பேரி செல்லும் பாதையில் உள்ள ஒரு பட்டாசு தொழிற்சாலையை சிவகாசியைச் சேர்ந்த ராஜா என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.

இங்கு தரைச்சக்கரம், ராக்கெட் உள்ளிட்ட பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்படுகின்றது.

14 அறைகள் கொண்ட இந்த தொழிற்சாலையில் 370 தொழிலாளர் பணிபுரிந்து கொண்டிருந்தனர். ஒரு அறையில் தரைச்சக்கரம் வெடிக்கு பவுடர் மருந்து இடிக்கும் போது அதனை அந்த தொழிலாளி கீழே போட்டுள்ளார். இதனால் பயங்கர சத்தத்துடன் மருந்து வெடித்து இரு அறைகள் உடனடியாக இடிந்து தரைமட்டமானது. இதனையடுத்து தொழிலாளர்கள் சிதறி ஓடிவிட்டனர். பின்னர் மேலும் மருந்துகள் வெடித்து சிதறி மேலும் 5 அறைகள் வெடித்து சிதறியது.

இதில் சிவகாசி, கங்காகுளத்தைச் சேர்ந்த பெ. இருளப்பன் (60) என்ற தொழிலாளி உடல் கருகி உயிரிழந்தார். மேலும் க.சந்தானம் (24), க.கணேசன் (25), க.ஆறுமுகக்கனி (21) ஆகிய மூவர் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் பற்றி அறிந்ததும் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.வேணுகோபால் மற்றும் போலீஸார் விரைந்து சென்று தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புப் படையினர் சில மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பாக மல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.