மூன்று தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்!

விரைவில் இடைதேர்தல் நடைபெறவுள்ள தமிழகத்தின் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியின் நெல்லித்தோப்பு ஆகிய நான்கு தொகுதிகளிலும்... 
மூன்று தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்!

சென்னை: விரைவில் இடைதேர்தல் நடைபெறவுள்ள தமிழகத்தின் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியின் நெல்லித்தோப்பு ஆகிய நான்கு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

எதிர்வரும் நவம்பர் 19-ம் தேதி அன்று தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியின் நெல்லித்தோப்பு ஆகிய 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தஞ்சாவூரில் எம்.ரங்கசாமி, அரவக்குறிச்சியில் வி.செந்தில் பாலாஜி, திருப்பறங்குன்றத்தில் ஏ.கே.போஸ், நெல்லித்தோப்பில் ஓம்.சக்தி சேகர் உள்ளிட்ட அதிமுக வேட்பாளர்கள்  இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

உடல்நிலைகாரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் உள்ள நிலையில், அதிமுகவினருக்கு இந்த 3 தொகுதிகளின் தேர்தல் முக்கியமானதாக கருதப்படுகிறது.

முகவினரும்  அதிமுகவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் முடிவில் இருப்பதால் தேர்தல் களம் சூடுபிடிக்கும் என்று கருதப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com