கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆயுதப்படை போலீஸார் மர்மச் சாவு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆயுதப்படை போலீஸார் மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்தது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள

News image
Updated On :13 செப்டம்பர் 2016, 8:40 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆயுதப்படை போலீஸார் மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்தது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம், ஈச்சன்விளையைச் சேர்ந்தவர் சீனியப்பன். இவர் தமிழ்நாடு காவல் துறையில் காவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மகன் சுடர்வேல் (33) என்பவருக்கு கருணை அடிப்படையில் காவலர் வேலை கிடைத்துள்ளது. இவர் பயிற்சி முடித்து 1.2.2011-ம் தேதி முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மொட்டமலையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 11-வது அணியில் காவலராக வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரு ஆண் மகன்கள் உண்டு. கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் சுடர்வேல் தனது குடும்பத்தை மொட்டமலையில் உள்ள காவலர் குடியிருப்புக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டில் பல இடங்களில் மர்மமான ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து உறவினர் பி.கடோரப்பா வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.