கன்னியாகுமரி மாவட்டம், ஈச்சன்விளையைச் சேர்ந்தவர் சீனியப்பன். இவர் தமிழ்நாடு காவல் துறையில் காவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மகன் சுடர்வேல் (33) என்பவருக்கு கருணை அடிப்படையில் காவலர் வேலை கிடைத்துள்ளது. இவர் பயிற்சி முடித்து 1.2.2011-ம் தேதி முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மொட்டமலையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 11-வது அணியில் காவலராக வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரு ஆண் மகன்கள் உண்டு. கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் சுடர்வேல் தனது குடும்பத்தை மொட்டமலையில் உள்ள காவலர் குடியிருப்புக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.