கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

மாற்றத்துக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மாற்றத்துக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர் என சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், திமுக எம்எல்ஏவுமான மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

News image
Updated On :28 மார்ச் 2017, 6:16 am

தினமணி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மாற்றத்துக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர் என சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், திமுக எம்எல்ஏவுமான மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
திமுக வேட்பாளர் என்.மருதுகணேஷை ஆதரித்து மா.சுப்பிரமணியன், தண்டையார்பேட்டை பகுதியில் திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருடன் மாவட்டச் செயலாளர்கள் மாதவரம் எஸ்.சுதர்சனம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.
அப்போது அவர் பேசியது:
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சியிலும், ஆட்சியிலும் மிகுந்த குழப்பம் நீடிக்கிறது. திமுக ஆட்சியில் ஏராளமான மக்கள்நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதிமுக ஆட்சியில் முக்கியத் திட்டங்கள்கூட கிடப்பில் போட்டப்பட்டுவிட்டன. இதுகுறித்து மக்கள் சிந்திக்க தொடங்கிவிட்டனர். எனவே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மாற்றத்துக்கு வாக்களித்து, திமுகவை வெற்றியடையச் செய்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை என்றார் மா.சுப்பிரமணியன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.