நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

மெட்ரோவில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் கைது

மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.10.50 லட்சம் மோசடி செய்ததாக அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் கைது செய்யப்பட்டனர்.

Updated On :30 ஜனவரி 2024, 10:03 pm IST


மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.10.50 லட்சம் மோசடி செய்ததாக அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர் மாவட்டம், அரக்கோணத்தைச் சேர்ந்த புருஷோத்தமன், அரசு வேலை தேடி வந்தார். சென்னை மாநகர அரசுப் பேருந்து நடத்துநரான பெரம்பூர் அர்ஜுனன் (42), ஓட்டுநர் சென்னை விம்கோ நகர் மதுரை வீரன் (48) ஆகியோரின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவர்கள் இருவரும், புருஷோத்தமனிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் மேலாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி, கடந்த 2015-இல் ரூ.10.50 லட்சம் வாங்கினராம். ஆனால் வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த புருஷோத்தமன், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மதுரை வீரன், அர்ஜுனன் மீது புகார் செய்தார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த அர்ஜுனன், மதுரை வீரன் ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.