ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆசிரியை இடமாற்றத்துக்கு எதிர்ப்பு: மாணவர்கள் போராட்டம்

நாமக்கல் அருகே அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ மாணவிகள் தரையில் அமர்ந்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
நாமக்கல் அருகே பெருமாப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், பெற்றோர்கள்.
Updated On :17 டிசம்பர் 2021, 6:00 am

DIN

நாமக்கல்: நாமக்கல் அருகே அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ மாணவிகள் தரையில் அமர்ந்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் பெருமாள்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் சுமார் 100 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியையாக ஜோதி என்பவரும், வகுப்பு ஆசிரியையாக ராஜேஸ்வரி என்பவர் பணியாற்றி வந்தனர். 

ஈராசிரியர் பள்ளி என்பதால் இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. அவர்களுக்குள் இருக்கும் மோதல் மாணவ, மாணவிகளை பாதிப்படைய செய்தது. மேலும் தலைமையாசிரியை மாணவியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இந்த பிரச்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரின் கவனத்திற்கு சென்றது. அதன்பின் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங்கிற்க்கு தெரியவந்தது. மாணவர்களின் பெற்றோர் தலைமை ஆசிரியைக்கு எதிராக பல்வேறு புகார்களை தெரிவித்தனர். 

Story image

நாமக்கல் அருகே பெருமாப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.

இதனைத் தொடர்ந்து இரு ஆசிரியைகளையும் இடமாற்றம் செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்படி, தலைமையாசிரியை ஜோதி கரட்டுப்பட்டி தொடக்கப் பள்ளிக்கும், மற்றொரு ஆசிரியை ராஜேஸ்வரி கொடிக்கால்புதூர் தொடக்க பள்ளிக்கும் மாறுதல் செய்யப் பட்டனர். 

இந்த தகவல் தெரியவந்ததை அடுத்து மாணவர்கள், அவர்களது பெற்றோர் பள்ளி நுழைவாயில் முன்பாக அமர்ந்து ஆசிரியை ராஜேஸ்வரியை இடமாற்றம் செய்யக் கூடாது என தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து அங்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர் த.ராமன் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்ள சமாதானப்படுத்தினர். ஆசிரியை இடமாறுதல் விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.