நாகப்பட்டினம்: பக்ரீத் பண்டிகையையொட்டி, ஜாக் அமைப்பினர் நாகூர் கடற்கரையில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
இறைவனின் கட்டளையை ஏற்று, தன் மகன் இஸ்மாயிலை தியாகம் செய்ய துணிந்த இப்ராஹிம் நபியின் தியாகத்தைப் போற்றும் வகையில், தியாகத் திருநாளாக பக்ரீத் பண்டிகைக் கொண்டாடப்படுகின்றது.
சௌதி அரேபியாவில் சனிக்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, ஜாக் அமைப்பினர் நாகூர் கடற்கரையில் சனிக்கிழமை காலை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். திரளான பெண்கள் உள்பட 1,000-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
தொழுகைக்குப் பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.