நாகப்பட்டினம்: பக்ரீத் பண்டிகையையொட்டி, ஜாக் அமைப்பினர் நாகூர் கடற்கரையில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
இறைவனின் கட்டளையை ஏற்று, தன் மகன் இஸ்மாயிலை தியாகம் செய்ய துணிந்த இப்ராஹிம் நபியின் தியாகத்தைப் போற்றும் வகையில், தியாகத் திருநாளாக பக்ரீத் பண்டிகைக் கொண்டாடப்படுகின்றது.
சௌதி அரேபியாவில் சனிக்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, ஜாக் அமைப்பினர் நாகூர் கடற்கரையில் சனிக்கிழமை காலை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். திரளான பெண்கள் உள்பட 1,000-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
தொழுகைக்குப் பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லையப்பா்- காந்திமதி அம்மன் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது!
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர்க் கப்பல்கள்: நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி!

மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கு: போலீசார் 6 பேர் மீது குற்றப்பத்திரிகை?







