இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திருவிழாவின்போது சாய்ந்த ராட்டினம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மக்கள்

வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கெங்கையம்மன் கோயில் திருவிழாவுக்கு அமைக்கப்பட்டிருந்த ரங்க ராட்டினத்தில் அச்சாணி உடைந்து ராட்டினம் சாய்ந்து நேரிட்ட விபத்தில் மக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

News image
திருவிழாவின்போது சாய்ந்த ராட்டினம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மக்கள்
Updated On :7 ஜூன் 2022, 7:44 am

DIN

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கெங்கையம்மன் கோயில் திருவிழாவுக்கு அமைக்கப்பட்டிருந்த ரங்க ராட்டினத்தில் அச்சாணி உடைந்து ராட்டினம் சாய்ந்து நேரிட்ட விபத்தில் மக்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

இதையும் படிக்க.. திருடிய லாக்கரை நகைகளோடு குப்பைத் தொட்டியில் வீசிய திருடர்கள்: ஏன்? எதற்கு?

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த பல்லலகுப்பம் கிராமத்தில் வைகாசி மாதம் ஆண்டு தோறும் கங்கை அம்மன் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதனிடையே பல்லலகுப்பம் கங்கை அம்மன் திருவிழா இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது. 

இதனிடையே கங்கையம்மன் திருவிழாவிற்கு அமைக்கப்பட்டிருந்த பொழுதுபோக்கு ரங்க ராட்டினத்தில் அச்சாணி உடைந்ததில் ரங்க ராட்டினம் சாய்ந்தது. அப்போது ராட்டினத்திலிருந்த 20க்கும் மேற்பட்டோர் கூச்சலிட்டனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை பத்திரமாக மீட்டனர். ரங்கராட்டினம் சாய்ந்ததில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் இச்சம்பவம் குறித்து மேல்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.