விருதுநகர் பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: முதல்வர் ஸ்டாலின்
விருதுநகர் பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.


விருதுநகர் பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
பேரவையில் இது குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், விருதுநகர் பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும். விருதுநகர் வழக்கில் 60 நாள்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரப்படும்.
விருதுநகர் வழக்கை ஒரு மாடல் வழக்காக எடுத்துக் கொண்டு மற்ற குற்ற வழக்குகளில் நடவடிக்கை எடுப்பது போல செயல்படுவோம். பொள்ளாச்சி பாலியல் வழக்கு போல இல்லாமல், விருதுநகர் வழக்கில் குற்றவாளிகளுக்கு எப்படி தண்டனை பெற்றுத் தருகிறோம் என்று பாருங்கள் என்று ஸ்டாலின் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...