புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தம்மம்பட்டியில் கனமழை: இடி தாக்கி தென்னை மரம் தீப்பிடித்து கருகியது!

தம்மம்பட்டி அருகே இடி தாக்கியதில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது. மின்சாதனப் பொருள்களும் பழுதடைந்தது.

News image
தம்மம்பட்டி சுவேத நதியில் இன்று காலை இரு கரைகளில் புரண்டோடிய செந்நீர்.
Updated On :11 அக்டோபர் 2022, 6:38 am

DIN

தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே இடி தாக்கியதில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது. மின்சாதனப் பொருள்களும் பழுதடைந்தது.

Story image

தம்மம்பட்டி பகுதியில் இரு நாள்களாக தொடர்மழை பெய்துவருகிறது. அதனால், தம்மம்பட்டி சுவேத நதியில் வெள்ளநீர் பாய்ந்தோடுகிறது. இந்நிலையில், நேற்று மாலை, தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டி கிராமத்தில் பலத்த இடி தாக்கியதில் பெரியசாமி என்பவரது தோட்டத்தில் இருந்த தென்னை மரம் ஒன்று தீப்பிடித்து எரிந்து கருகியது. 

இடியால், அப்பகுதியில் சில வீடுகளில் இருந்த மின்சாதனப் பொருள்களும் பழுதடைந்தன. தொடர்ந்து, தம்மம்பட்டி பகுதியில் நேற்று நள்ளிரவு பலத்த மழை கொட்டித் தீர்த்தது. அதனால், அனைத்து ஓடைகளிலும் மழைநீர் செல்கிறது. பள்ளமான பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.