பாம்பன் பாலத்தில் நிகழவிருந்த கோர விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்!

ராமேசுவரம் பாம்பன் பாலத்தில் தனியார் பேருந்தும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி இன்று காலை விபத்துக்குள்ளானது.
படம்: டிவிட்டர்
படம்: டிவிட்டர்

ராமேசுவரம் பாம்பன் பாலத்தில் தனியார் பேருந்தும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி இன்று காலை விபத்துக்குள்ளானது.

சென்னையிலிருந்து ராமேசுவரம் நோக்கி தனியார் ஆம்னி பேருந்து இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது ராமேசுவரத்திலிருந்து மதுரை நோக்கி வந்த அரசுப் பேருந்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில், காயமடைந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில், தனியார் ஆம்னி பேருந்து பாலத்தின் தடுப்புச் சுவர் மீது ஏறி நின்றதால், பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நூலிழையில் கோர விபத்து தவிர்க்கப்பட்டது.

மேலும், இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதால், நீண்ட நேரம் மண்டபம் - ராமேசுவரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com