சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: குளிக்கத் தடை!
தேனி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுருளி அருவியில் செவ்வாய்க்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.


தேனி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுருளி அருவியில் செவ்வாய்க்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
தேனி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுருளி அருவி சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாக உள்ளது. ஆண்டு முழுவதும் அருவியில் தண்ணீர் வரத்து இருக்கும்.
வடகிழக்கு பருவமழை காரணமாக சுருளி அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தைப் பாறை உள்ளிட்ட நீரோடைகளில் இரவு விடிய விடிய மழை பெய்தது. அதன் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைக் கண்காணித்த கம்பம் கிழக்கு வனச்சரகத்தினர் செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் குளிக்கத் தடை விதித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...